புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புனித தலங்களுக்கு சொகுசுப் பேருந்துகள்: தில்லி அரசு பரிசீலனை

தலைநகருக்கு அருகிலுள்ள புனித யாத்திரை தலங்களுக்கு சொகுசு பேருந்துகளில் மூத்த குடிமக்களை அனுப்புவது குறித்து தில்லி அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.  

News image
Updated On :12 ஆகஸ்ட் 2023, 1:18 pm

DIN

தலைநகருக்கு அருகிலுள்ள புனித யாத்திரை தலங்களுக்கு சொகுசு பேருந்துகளில் மூத்த குடிமக்களை அனுப்புவது குறித்து தில்லி அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 
குஜராத்தில் உள்ள துவாரகதீஷ் கோயிலுக்கு யாத்திரை செல்லும் குழுவினரை தியாகராஜ் மைதானத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று சந்தித்தார். அப்போது தில்லிக்கும், நாட்டிற்கும் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 
தொடர்ந்து அவர் கூறியதாவது, முக்ய மந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 72 ரயில்கள் மூலம் தில்லியில் இருந்து 71,000க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரை சென்றுள்ளனர். தில்லியில் உள்ள ஒவ்வொரு வயதான நபரும் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 
ஆனால் சில நேரங்களில் ரயில்கள் கிடைக்காது. எனவே, அயோத்தி போன்ற அருகிலுள்ள புனிதத் தலங்களுக்கு மக்களை அனுப்ப சொகுசுப் பேருந்துகளைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.