புது தில்லி: நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் 30 சதவீதம் குறைவாகப் பெய்திருப்பதோடு, இதுவரை சந்திக்காத ஒரு ஆகஸ்ட் மாதமாக இது அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் பருவமழை மற்றும் வெப்பநாள்களை புரட்டிப் போட்டு வெகுவாக பருவகாலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது எல் நினோ. இதனால், கடந்த 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான, வறட்சியாக ஆகஸ்ட் மாதமாக நாம் கடந்து செல்லவிருக்கும் ஆகஸ்ட் மாதம் அமைந்துவிட்டது.
இதையும் படிக்க.. சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு: இன்று வானில் தெரியும்!
இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய வழக்கமான மழை அளவில் 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 20 நாள்கள் தான் மழை பெய்திருக்கிறது, மற்ற நாள்களில் மழை பிரேக் எடுத்துக் கொண்டதால், ஜூன் - செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் மிகக் குறைவான மழையே பதிவாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த மாதம் முடிவடைய இன்னும் ஒரே ஒரு நாள்தான் பாக்கியிருக்கும் நிலையில், வழக்கமாக இந்த மாதத்தில் 241 மி.மீ. மழை பெய்ய வேண்டியது, ஆனால் 160.3 மி.மீ. மழைதான் பதிவாகியிருக்கிறது. இது 33 சதவிகிதம் குறைவாகும்.
இதையும் படிக்க.. ஐஃபோன் 15 எப்போது அறிமுகம்? தேதியை அறிவித்தது ஆப்பிள்
இதற்கு முன்பு, 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 191.2 மி.மீ. மழை பெய்தது. இது 25 சதவீதம் குறைவு. இதுதான் வழக்கமான அளவை விடக் குறைவாக பதிவாகியிருந்தது. ஆனால், அதை விஞ்சும் வகையில் தற்போது பருவமழை அதிக நாள்கள் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளது. முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 30 சதவீதம் அளவுக்கும் மேல் மழை குறைவாகப் பெய்திருப்பது இதுவே முதல் முறை.
பருவமழை தொடர்ந்து குறைந்து வருவது, நாட்டின் வறட்சி நிலையை அபாயத்தில் தள்ளும் ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதியின் இழிவான பேச்சு: தவெக அமைச்சர்கள் கடும் கண்டனம்!
நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!

வடிவேலு பட பாணியில் டிராமா! வலிப்பு வந்தது போல் நடித்துப் பணம் பறிப்பு!

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



