திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

இப்படி ஒரு ஆகஸ்ட் மாதத்தை சந்தித்ததே இல்லையாம்!

நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் 30 சதவீதம் குறைவாகப் பெய்திருப்பதோடு, இதுவரை சந்திக்காத ஒரு ஆகஸ்ட் மாதமாக இது அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:09 pm

DIN


புது தில்லி: நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் 30 சதவீதம் குறைவாகப் பெய்திருப்பதோடு, இதுவரை சந்திக்காத ஒரு ஆகஸ்ட் மாதமாக இது அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் பருவமழை மற்றும் வெப்பநாள்களை புரட்டிப் போட்டு வெகுவாக பருவகாலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது எல் நினோ. இதனால், கடந்த 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான, வறட்சியாக ஆகஸ்ட் மாதமாக நாம் கடந்து செல்லவிருக்கும் ஆகஸ்ட் மாதம் அமைந்துவிட்டது.

இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய வழக்கமான மழை அளவில் 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 20 நாள்கள் தான் மழை பெய்திருக்கிறது, மற்ற நாள்களில் மழை பிரேக் எடுத்துக் கொண்டதால், ஜூன் - செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் மிகக் குறைவான மழையே பதிவாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மாதம் முடிவடைய இன்னும் ஒரே ஒரு நாள்தான் பாக்கியிருக்கும் நிலையில், வழக்கமாக இந்த மாதத்தில் 241 மி.மீ. மழை பெய்ய வேண்டியது, ஆனால் 160.3 மி.மீ. மழைதான் பதிவாகியிருக்கிறது. இது 33 சதவிகிதம் குறைவாகும்.

இதற்கு முன்பு, 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 191.2 மி.மீ. மழை பெய்தது. இது 25 சதவீதம் குறைவு. இதுதான் வழக்கமான அளவை விடக் குறைவாக பதிவாகியிருந்தது. ஆனால், அதை விஞ்சும் வகையில் தற்போது பருவமழை அதிக நாள்கள் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளது. முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 30 சதவீதம் அளவுக்கும் மேல் மழை குறைவாகப் பெய்திருப்பது இதுவே முதல் முறை.

பருவமழை தொடர்ந்து குறைந்து வருவது, நாட்டின் வறட்சி நிலையை அபாயத்தில் தள்ளும் ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.