நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இப்படி ஒரு ஆகஸ்ட் மாதத்தை சந்தித்ததே இல்லையாம்!

நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் 30 சதவீதம் குறைவாகப் பெய்திருப்பதோடு, இதுவரை சந்திக்காத ஒரு ஆகஸ்ட் மாதமாக இது அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2023, 7:40 am


புது தில்லி: நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் 30 சதவீதம் குறைவாகப் பெய்திருப்பதோடு, இதுவரை சந்திக்காத ஒரு ஆகஸ்ட் மாதமாக இது அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் பருவமழை மற்றும் வெப்பநாள்களை புரட்டிப் போட்டு வெகுவாக பருவகாலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது எல் நினோ. இதனால், கடந்த 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான, வறட்சியாக ஆகஸ்ட் மாதமாக நாம் கடந்து செல்லவிருக்கும் ஆகஸ்ட் மாதம் அமைந்துவிட்டது.

இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய வழக்கமான மழை அளவில் 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 20 நாள்கள் தான் மழை பெய்திருக்கிறது, மற்ற நாள்களில் மழை பிரேக் எடுத்துக் கொண்டதால், ஜூன் - செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் மிகக் குறைவான மழையே பதிவாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மாதம் முடிவடைய இன்னும் ஒரே ஒரு நாள்தான் பாக்கியிருக்கும் நிலையில், வழக்கமாக இந்த மாதத்தில் 241 மி.மீ. மழை பெய்ய வேண்டியது, ஆனால் 160.3 மி.மீ. மழைதான் பதிவாகியிருக்கிறது. இது 33 சதவிகிதம் குறைவாகும்.

இதற்கு முன்பு, 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 191.2 மி.மீ. மழை பெய்தது. இது 25 சதவீதம் குறைவு. இதுதான் வழக்கமான அளவை விடக் குறைவாக பதிவாகியிருந்தது. ஆனால், அதை விஞ்சும் வகையில் தற்போது பருவமழை அதிக நாள்கள் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளது. முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 30 சதவீதம் அளவுக்கும் மேல் மழை குறைவாகப் பெய்திருப்பது இதுவே முதல் முறை.

பருவமழை தொடர்ந்து குறைந்து வருவது, நாட்டின் வறட்சி நிலையை அபாயத்தில் தள்ளும் ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.