எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஒரே நாளில் 69.9 லட்சம் பேர் பயணித்த தில்லி மெட்ரோ ரயில்

தில்லி மெட்ரோ ரயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 69.9 லட்சம் பேர் பயணித்தது புதிய சாதனையாக அமைந்துள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2023, 12:31 pm

DIN


புது தில்லி: தில்லி மெட்ரோ ரயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 69.9 லட்சம் பேர் பயணித்தது புதிய சாதனையாக அமைந்துள்ளது.

கரோனா காலத்துக்கு முன்பும், பின்பும் இதுவரை ஒரே நாளில் 68.1 லட்சம் பேர் பயணித்ததே அதிகபட்சமாக இருந்தது. அதையும் தாண்டி கடந்த செவ்வாயன்று 69.9 லட்சம் பேர் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளது.

கரோனா பொதுமுடக்கக் காலத்துக்கு முன்பும் கூட, ரக்சா பந்தன் நாள்களில் அதிகமான பயணிகள் தில்லி மெட்ரோவில் பயணிப்பார்கள். அதேப்போன்றுதான், இந்த முறையும் ரக்சா பந்தன் நாளில் அதிகம் பேர் தில்லி மெட்ரோவில் பயணித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து ஜி20 மாநாடு நடைபெறும் நாள்களிலும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் ஏற்படும் என்பதால் அதிகமானோர் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.