மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினா் கே. சுரேஷ் கோரிக்கை விடுத்தாா்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி.கே. சுரேஷ் பேசியதாவது: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு புதிய நாடாளுமன்ற வளாகத்தில் உருவச் சிலை நிறுவ வேண்டும். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவப்படம் பொருத்தப்பட வேண்டும். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (ஐசிஏஆா்) அவரின் பெயரைச் சூட்ட வேண்டும். மேலும், அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும்.
அவரது இறுதிச் சடங்கில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சோ்ந்தவா்கள் யாரும் பங்கேற்காமல் அவரை அவமதித்தனா் என்றாா்.
இதற்குப் பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, ‘மக்களவை உறுப்பினரின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் விளக்கமளிப்பாா்கள். ஆனால், 3 மாநிலத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை மறைக்க அக்கட்சியின் எம்.பி. பாஜக மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறாா்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.