கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திரிணமூல் எம்.பி. மஹுவா விவகாரம்: மக்களவையில் விவாதிக்க ஓம் பிா்லாவிடம் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு தொடா்பான நெறிமுறைகள் குழுவின் விசாரணை அறிக்கை

News image
Updated On :4 டிசம்பர் 2023, 8:50 pm

DIN

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு தொடா்பான நெறிமுறைகள் குழுவின் விசாரணை அறிக்கை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் திங்கள்கிழமை வலியுறுத்தினா்.

மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரை விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிா்லா பரிந்துரைத்தாா். அந்தக் குழு மஹுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையை அந்தக் குழுவின் தலைவா் வினோத் குமாா் சோன்கா், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்வாா் என்று தகவல் வெளியானது. ஆனால், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், அந்த அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மஹுவா மீதான நெறிமுறைகள் குழுவின் அறிக்கை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.

இதுதவிர, ஆங்கிலேய ஆட்சிகால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 மசோதாக்கள் குறித்து விவாதிக்க 12 மணி நேரமும், தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் இதர தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா குறித்து விவாதிக்க 3 மணி நேரமும் ஒதுக்க அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.