பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கென்ய அதிபருடன் ஆக்கபூர்வமான உரையாடல்: பிரதமர் மோடி

இந்தியா வந்துள்ள கென்ய அதிபருடன் வில்லியம் ரூடோ உடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
கென்ய அதிபர் வில்லியம் ரூடோ உடன் பிரதமர் மோடி
Updated On :5 டிசம்பர் 2023, 2:10 pm

DIN

இந்தியா வந்துள்ள கென்ய அதிபருடன் வில்லியம் ரூடோ உடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபா் வில்லியம் ரூடோ 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (டிச.4) வந்தார். கென்ய அதிபராக ரூடோ பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ளார்.

அவர் இன்று (டிச.5) இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “கென்ய அதிபர் வில்லியம் ரூடோ உடன் இன்று நடைபெற்ற உரையாடல் ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது.

இந்தியா மற்றும் கென்யா இடையிலான இத்தனை ஆண்டுகள் உறவு குறித்து மதிப்பாய்வு செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசித்தோம்.

தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், எரிசக்தி மற்றும் பல துறைகளிலும் இந்தியா மற்றும் கென்யா இணைந்து செயல்படும். இரு நாட்டு நல்லுறவில் மக்களுக்கு இடையேயான தொடர்புகள் மிகவும் முக்கியமானது. எனவே கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசித்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.

கென்யாவின் அதிபா் ஒருவா் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளது கடந்த 6 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். ஜி-20 கூட்டமைப்பில் 55 நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அதிபா் ரூட்டோ இந்திய பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.