தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் காருவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அறிந்து மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான கே. சந்திரசேகர் ராவ் வியாழக்கிழமை இரவு எர்ரவல்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதுடன், இடுப்பு பகுதியில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.