மத்திய பிரதேசம் பார்கேடா ஹாசன் கிராமத்தில் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததற்காக தன்னை உறவினர் ஒருவர் அடித்துத் துன்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பா.ஜ.விற்கு வாக்களித்ததால் தனது மைத்துனரால் கடந்த டிசம்பர் 4-ஆம் நாள் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். பா.ஜ.க.விற்கு வாக்களித்தது தெரியவும் முதலில் திட்டியவர், பின் மூங்கில் கம்பால் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து தாக்கியுள்ளார். பின் அலறல் சத்தம் கேட்டு வந்த அண்டை வீட்டாரால் காப்பாற்றப்பட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எப்படி இருக்கிறார் சந்திரசேகர் ராவ்?
மேலும், 'இனி எங்களது பேச்சைக் கேட்காவிட்டால் கொன்றுவிடுவோம்' என அவரம் அவரது மனைவியும் மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைதுசெய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.