இந்தியாவில் கடந்த ஆண்டு பெண்கள் மீதான அமில தாக்குதல்கள் அதிகமாக நடந்த நகரங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 19 பெருநகரங்களின் பட்டியலில் 2022-ஆம் ஆண்டு பெங்களூருவில் 6 வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பெங்களூருவில் 8 பெண்கள் அமில தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதிக அமில தாக்குதல்கள் நடைபெற்ற நகரங்களில் முதல் இடம் பெங்களூருவிற்கும், இரண்டாவது இடத்தில் தில்லியும், மூன்றாம் இடத்தில் அகமதாபாத்தும் உள்ளன. தில்லியில் 7 வழக்குகளும், அகமதாபாத்தில் 5 வழக்குகளும் பதிவாகியுள்ளன.