இந்தியாவில் அதிகமான அமில தாக்குதல்கள் நடந்த நகரம் இதுதான்!

இந்தியாவில் கடந்த ஆண்டு அதிகமான ஆசிட் தாக்குதல்கள் நடந்த நகரங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு பெண்கள் மீதான அமில தாக்குதல்கள் அதிகமாக நடந்த நகரங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. 

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 19 பெருநகரங்களின் பட்டியலில் 2022-ஆம் ஆண்டு பெங்களூருவில் 6 வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பெங்களூருவில் 8 பெண்கள் அமில தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 

அதிக அமில தாக்குதல்கள் நடைபெற்ற நகரங்களில் முதல் இடம் பெங்களூருவிற்கும், இரண்டாவது இடத்தில் தில்லியும், மூன்றாம் இடத்தில் அகமதாபாத்தும் உள்ளன. தில்லியில் 7 வழக்குகளும், அகமதாபாத்தில் 5 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com