திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்தியாவில் அதிகமான அமில தாக்குதல்கள் நடந்த நகரம் இதுதான்!

இந்தியாவில் கடந்த ஆண்டு அதிகமான ஆசிட் தாக்குதல்கள் நடந்த நகரங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்.

Updated On :10 டிசம்பர் 2023, 1:53 pm IST

இந்தியாவில் கடந்த ஆண்டு பெண்கள் மீதான அமில தாக்குதல்கள் அதிகமாக நடந்த நகரங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. 

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 19 பெருநகரங்களின் பட்டியலில் 2022-ஆம் ஆண்டு பெங்களூருவில் 6 வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பெங்களூருவில் 8 பெண்கள் அமில தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 

அதிக அமில தாக்குதல்கள் நடைபெற்ற நகரங்களில் முதல் இடம் பெங்களூருவிற்கும், இரண்டாவது இடத்தில் தில்லியும், மூன்றாம் இடத்தில் அகமதாபாத்தும் உள்ளன. தில்லியில் 7 வழக்குகளும், அகமதாபாத்தில் 5 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.