இலங்கையில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதையடுத்து, இலங்கையில் டெங்கு பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.
டிசம்பரில் மட்டும் இதுவரை 3,704 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. இதையடுத்து ஞாயிறு காலை நிலவரப்படி மொத்தம் 80,192 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பாதித்து 47 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேற்கு மாகாணத்தில் 46.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.