மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது
மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


மும்பை : மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மும்பையின் சேவ்ரி பகுதியில் தங்கியிருந்து, வங்கதேசத்திற்கு சட்டவிரோதமாக பணம் அனுப்பி வந்த புகாரில், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் இம்மாதம் கைது செய்த நிலையில், அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் முறையான ஆவணங்கள் ஏதுமில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பெற்றிருந்த ஆதார் மற்றும் பான் கார்டுகள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...