புது தில்லி: விஜய் திவஸ் நாளையொட்டி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார், அவர்களின் தியாகங்கள் இந்தியாவுக்கு தீர்க்கமான வெற்றிக்கு வழிவகுத்தன. அவர்களின் அசைக்க முடியாத மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பு, நாட்டின் வரலாற்றிலும் அதன் மக்களின் இதயங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரா்கள் டாக்காவில் இந்திய படைகளிடம் சரணடைந்தனா். இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ஆம் தேதி ‘விஜய் திவஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்த போரின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு (வங்கதேசம்) இந்தியா விடுதலை பெற்று தந்தது.
இந்த நிலையில், போரில் இந்தியா வெற்றி பெற்ற நாளையொட்டி, போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க | விஜய் திவாஸ்: போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை!
Today, on Vijay Diwas, we pay heartfelt tributes to all the brave heroes who dutifully served India in 1971, ensuring a decisive victory. Their valour and dedication remain a source of immense pride for the nation. Their sacrifices and unwavering spirit will forever be etched inâ¦
â Narendra Modi (@narendramodi) December 16, 2023
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போரில் இந்தியா வெற்றி பெற்ற நாளையொட்டி,"இன்று, ‘விஜய் திவஸ்’ கொண்டாடப்படுகிறது. 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வெற்றியை உறுதிசெய்து, நாட்டிற்கு பணிவுடன் சேவையாற்றிய அனைத்து துணிச்சலான மாவீரர்களுக்கும் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் வீரமும், அர்ப்பணிப்பும் தேசத்திற்கு மகத்தான பெருமையை தந்துள்ளது. அவர்களின் தியாகமும், அசைக்க முடியாத மன உறுதியும் மற்றும் அர்ப்பணிப்பும் என்றென்றும் நிலைத்திருக்கும். அது நமது தேசத்தின் வரலாற்றிலும் மக்களின் இதயங்களிலும், பொறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீரத்திற்கு இந்தியா வணக்கம் செலுத்துகிறது மற்றும் அவர்களின் அசைக்க முடியாத மன உறுதியை நினைவு கூர்கிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
இதற்கிடையில், இந்திய இராணுவம் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டிசம்பர் 16, 1971 இல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரின் மீதான இந்திய ஆயுதப்படைகளின் வரலாற்று வெற்றியைக் குறிக்கிறது. இந்த நாளில், இந்திய ஆயுதப்படையின் உறுதி மற்றும் துணிச்சலுக்கு வணக்கம் செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளது.
அறிக்கைகளின்படி, 1971 இல் நடைபெற்ற போரின்போது 3,900 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், 9,851 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு! ஆ. ராசா நேரில் சந்திப்பு!

மா இண்டி பங்காரம்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 17 - 23)

19வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு அரவிந்த் கேஜரிவால் ஆதரவு!







