அரவிந்த் கேஜரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மீண்டும் புதிதாக அழைப்பாணை அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் புதிதாக அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்துவதற்கு டிசம்பர் 21-ஆம் தேதி ஆஜராகுமாறு தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. 

முன்னதாக, நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணை தெளிவற்றதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு இருந்ததாகவும் கூறி விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தார் அரவிந்த் கேஜரிவால்.

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தற்போது மீண்டும் புதிதாக அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஏற்கனவே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய புலனாய்வு அமைப்பு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அழைத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com