மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம்!

மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி அவர்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமாவளவன்,  கார்த்தி சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், சுப்ரியா சுலே, சசி தரூர் உள்ளிட்ட 49 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை உறுப்பினா்கள் 33 போ், மாநிலங்களவை உறுப்பினா்கள் 45 போ் என 78 எம்.பி.க்கள் திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இதுவரை இக்கூட்டத்தொடரில் மக்களவையில் 95 பேர், மாநிலங்களவையில் 46 பேர் என 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை தற்போது 141-ஆக அதிகரித்துள்ளது.

குளிா்கால கூட்டத்தொடா் வரும் 22-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com