விவசாயத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது: அர்ஜூன் முண்டா

வேளாண் துறை வேகமாக வளர்ந்து வருவதாகவும், வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா இன்று தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் முண்டா (கோப்புப் படம்)
அர்ஜுன் முண்டா (கோப்புப் படம்)

புதுதில்லி: வேளாண் துறை வேகமாக வளர்ந்து வருவதாகவும், வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா இன்று தெரிவித்துள்ளார்.

அக்ரிகல்ச்சர் டுடே குழுமம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முண்டா மேலும் தெரிவித்ததாவது: 

சந்தேகத்திற்கு இடமின்றி நமது விவசாயத் துறை வேகமாக வளர்ந்து முன்னேற்றமும் அடைந்து வருகிறது. முயற்சிகளை மேற்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். அதே வேளையில் இறக்குமதியை குறைப்பதோடு, ஏற்றுமதியை அதிகரிக்கவும் வேண்டும என்று முண்டா வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் விவசாயத் துறையில் நாடு தன்னிறைவு அடைய ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com