தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ராஜஸ்தான்: அறையில் இருந்த ஹீட்டர் தீப்பற்றியதில் தந்தை, மகள் பலி

ராஜஸ்தானில் வீடு ஒன்றின் அறையில் இருந்த ஹீட்டர் தீப்பற்றியதில் தந்தை, மகள் பலியாகினர். 

News image
கோப்புப்படம்
Updated On :23 டிசம்பர் 2023, 10:43 am

DIN

ராஜஸ்தானில் வீடு ஒன்றின் அறையில் இருந்த ஹீட்டர் தீப்பற்றியதில் தந்தை, மகள் பலியாகினர். 

ராஜஸ்தான் மாநிலம், கைர்தல்-திஜாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் தீபக். நேற்றிரவு இவரது வீட்டின் அறையில் இருந்த ஹீட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனே தீ அறையில் இருந்த மெத்தைக்கும் பரவியது. 

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு தீபக் மற்றும் அவரது 3 மாத மகள் நிஷிகா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தீபக்கின் மனைவி சஞ்சு தீக்காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் அவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.