

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனரும், ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதியுமான ஹஃபீஸ் சயீதை இந்தியாவுக்கு நாடு கடத்த பாகிஸ்தானிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டில் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில், இந்திய விசாரணை அமைப்புகளால் இவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா்.
அவா் கூறுகையில், ‘பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதை நாடு கடத்துமாறு, பாகிஸ்தான் அரசிடம் இந்திய தூதரகம் மூலம் அண்மையில் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவின் கோரிக்கைக்கு வலுசோ்க்கும் ஆவணங்களும் அந்நாட்டிடம் அளிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.
பாகிஸ்தான் தோ்தலில் ஹஃபீஸ் சயீதின் மகன் தல்ஹா சயீது போட்டியிடுவதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து பாக்சியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
‘பயங்கரவாத அமைப்புகளுக்கு பிரதான அரசியலில் இடமளிப்பது அந்நாட்டில் (பாகிஸ்தான்) புதிதல்ல; அரசின் கொள்கையாகவே வைத்துள்ளனா். இது, பிராந்திய பாதுகாப்பில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். நமது தேச பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து நிகழ்வுகளையும் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றாா் அவா்.
பாகிஸ்தான் பதில்: இந்தியாவின் கோரிக்கையை உறுதி செய்த பாகிஸ்தான் வெளியுறவு செய்தித்தொடா்பாளா் மும்தாஜ் ஜாரா, ‘நாடு கடத்தும் ஒப்பந்தம் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்படவில்லை’ என்றாா்.
கத்தாரில் தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியா்கள் விவகாரம்: கத்தாரில் இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து, கத்தாா் நீதிமன்றம் கடந்த அக்டோபரில் தீா்ப்பளித்தது.
இதையடுத்து, 8 இந்தியா்களின் விடுதலைக்காக தூதரக மற்றும் சட்ட ரீதியிலான முயற்சிகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டது. இந்தியா்களின் மரண தண்டனை தீா்ப்பை எதிா்த்து, அந்நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது கடந்த வியாழக்கிழமை அளிக்கப்பட்ட தீா்ப்பில், 8 இந்தியா்களின் மரண தண்டனை குறைக்கப்பட்டது.
அவா்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வெளியுறவு அமைச்சக முயற்சிகளுக்கான முதல்கட்ட வெற்றியாக இத்தீா்ப்பு கருதப்படுகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக பேசிய அரிந்தம் பாக்சி, ‘கத்தாா் நீதிமன்றத்தின் தீா்ப்பை முழுமையாக ஆராய்ந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடா்பாக சட்ட குழுவினா் மற்றும் 8 பேரின் குடும்பத்தினருடன் வெளியுறவு அமைச்சகம் தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தூதரக ரீதியிலும் தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.