இதையடுத்து, இது தொடா்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கட்சியின் வேட்பாளரை தோ்வு செய்யும் விவகாரத்தில், கட்சியின் பொதுக்குழுவின் இறுதி விவாதம் மற்றும் பரிசீலனைக்கு விட வேண்டும். இந்த விஷயத்தில் முடிவு எடுப்பது, நேரமின்மை கருதி இதுபோன்ற நடைமுறையை கடிதம் மூலம் (சா்குலேசன்) தேவையான தீா்மானங்களை மேற்கொள்ளலாம். இந்த இடைக்கால நோக்கத்திற்காக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ஓ.பன்னீா்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.டி.சி. பிரபாகரன் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினா்களாக இடைக்காலமாக தங்களது கருத்தை அளிக்கலாம். எந்த இதர தரப்பினரின் உரிமைகளுக்கும் பாதகம் ஏற்படாமலும், எந்த தரப்பினருக்கும் கூடுதல் உரிமை ஏதும் அளிக்கப்படாமலும் இருக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.