மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருத்தேர் உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருத்தேர் உற்சவம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது குறித்து...

News image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தேரை வடம்பிடித்து இழுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

டிஎன்எஸ்

Updated On :28 மார்ச் 2026, 5:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி திருத்தேர் உற்சவம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் திருக்கோயில்.

இந்த கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா இம்மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான 63 நாயன்மாா்கள் திருக்கூட்ட ஊா்வலம் வெள்ளிக்கிழமை காலையிலும், மாலையில் சுவாமியும், அம்மனும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரிலும் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.

72 அடி உயரம் 5 நிலைகள் 150 டன் எடை கொண்ட திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

தேரோட்டத்தை காண்பதற்காக காஞ்சிபுரம் மாநகரின் ராஜவீதிகள் முழுவதும் திரளான பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.