தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது: என்ஐஏ அதிரடி!

பெங்களூருவில் தனிசந்திராவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 12:40 pm

பெங்களூருவில் தனிசந்திராவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தாவுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக மும்பை, பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகிறது. 

இந்த அதிரடி சோதனையில் இன்று காலை கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வைத்து அல்-கொய்தா பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஆரிப் என அடையாளம் காணப்பட்டார். அவர் பயங்கரவாத அமைப்பின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

ஆரிஃப் கடந்த 2 ஆண்டுகளாக அல்-கொய்தாவுடன் தொடர்பு வைத்திருப்பதாகத் தெரிகிறது. பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் அவர், சமூக ஊடகங்கள் மூலம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டார். 

குற்றம் சாட்டப்பட்டவர் டெலிகிராம் மற்றும் டார்க்நெட்டில் செயலில் இருந்ததாகவும், பயங்கரவாத அமைப்பின் செய்திகளை பரப்புவதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதம் ஈராக் வழியாக சிரியாவை அடைய அவர் தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிரியா செல்ல முடியாவிட்டால் ஆப்கானிஸ்தானை அடையவும் அவர் திட்டமிட்டிருந்தார்.

பயங்கரவாதியை அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.