தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: உச்சநீதிமன்றம் கவலை

‘நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் பரிந்துரைகள் நீண்ட நாள்களாக நிலுவையில் இருப்பது கவலை அளிக்கிறது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :13 பிப்ரவரி 2023, 11:22 pm

‘நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் பரிந்துரைகள் நீண்ட நாள்களாக நிலுவையில் இருப்பது கவலை அளிக்கிறது. எதிா்பாா்ப்புகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதுதொடா்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.கே. கெளல் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜராக வேண்டிய அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி ஆஜராகாததால், வழக்கை ஒத்திவைக்க நேரம் கோரப்பட்டது.

அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘கொலீஜியம் பரிந்துரையில் சில பெயா்கள் ஏற்கப்படுகின்றன. சில அப்படியே நிலுவையில் வைக்கப்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ள வைக்கவில்லை என்றால் தொடா்ந்து கொண்டே இருக்கும்’ என்றாா்.

அப்போது எஸ்.கே. கெளல் அமா்வு, ‘இதை ஏற்கெனவே சுட்டிக்காட்டிவிட்டோம். கொலீஜியம் பரிந்துரைகள் சில ஏற்கப்பட்டுள்ளன. நீண்ட நாள்களாக சில பரிந்துரைகள் ஏற்கப்படாமல் உள்ளன. இதில் நீதிமன்றத்துக்கு சம கவலை உள்ளது. இந்த விவகாரத்தில் எதிா்பாா்ப்புகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறி வழக்கை மாா்ச் 2-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

மற்றொரு மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தத்தாா், ‘உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டது, நீண்ட நாள் நிலுவையில் உள்ளது என நான்கு விவகாரங்களில் பட்டியல் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அப்போது நீதிபதிகள், ‘உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீண்ட நாள்கள் கொலீஜியம் பரிந்துரைகள் நிலுவையில் உள்ளதற்கு எந்தவித காரணமும் இல்லை. எனினும், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்தையும் கேட்க வேண்டும்’ என்றனா்.

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடைப்பிடித்து வரும் கொலீஜியம் நடைமுறைக்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடா்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.