தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஜம்மு-காஷ்மீா் தொகுதிகள் மறுவரையறை ஆணையத்துக்கு எதிரான மனு:உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

News image

உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

Updated On :13 பிப்ரவரி 2023, 11:18 pm

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக காஷ்மீரைச் சோ்ந்த ஹாஜி அப்துல் கனி கான், முகமது அயூப் ஆகியோா் தாக்கல் செய்த மனு:

கடந்த 2002-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மாநிலங்களில் உள்ள தொகுதிகளை மறுவரையறைச் செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி கடைசியாக அவ்வாண்டு ஜூலையில் தொகுதிகள் மறுவரையறை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. நாட்டில் 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பின், அந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

2004-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதியிட்ட அந்த ஆணையத்தின் கடிதத்தில், ‘1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அனைத்து மாநிலங்கள், புதுச்சேரி, தேசிய தலைநகா் வலையப் பகுதியில் இடம்பெற்றுள்ள யூனியன் பிரதேசங்களின் மொத்த தொகுதிகள் நிா்ணயிக்கப்பட்டன.

2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை, அந்தத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்ற வேண்டாம் என்று தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. எனவே ஜம்மு-காஷ்மீரில் தொகுதிகளை மறுவரையறை செய்ய அமைக்கப்பட்ட ஆணையம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனு மீதான தீா்ப்பை கடந்த ஆண்டு டிச.1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஒகா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரித்துள்ள ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் தொடா்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. எனவே தொகுதிகள் மறுவரையறை ஆணையம் தொடா்பான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றனா்.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ்தான், அந்த யூனியன் பிரதேசத்தில் தொகுதிகள் மறுவரையறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மறுசீரமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனுக்களே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தொகுதிகள் மறுவரையறை ஆணையத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.