நீதி ஆயோக்கிற்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்!

நீதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பிவிஆர். சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி ஆயோக்கிற்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்!

நீதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பிவிஆர். சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தலைமை செயல் அதிகாரியாக இருந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

நீதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிவிஆர். சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜம்மு - காஷ்மீரின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும்போது பலரால் கவனம் பெற்றவர். 

1987ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தார் பிவிஆர். சுப்பிரமணியம். உள் துறை பாதுகாப்பு நிர்வாகத்தில் மிகுந்த திறமை வாய்ந்தவர். ஜம்மு - காஷ்மீர் தலைமை செயலாளராக இருப்பதற்கு முன்பு, சத்தீஸ்கர் மாநில கூடுதல் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com