பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாடாளுமன்றத்தில் சிவசேனைக்கான அறையையும் இழந்தார் உத்தவ்: ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கீடு!

நாடாளுமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனையின் அறை ஒதுக்கப்படுவதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 8:04 am

DIN


மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனையின் அறை ஒதுக்கப்படுவதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான், உண்மையான சிவசேனை என்று இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது.

மேலும், கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி, தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, மக்களவையில் சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை எண் 128-ஐ ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி மக்களவைச் செயலகத்துக்கு ஷிண்டே தரப்பினர் கடிதம் எழுந்தியிருந்தனர்.

இந்நிலையில், சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற அறையை ஷிண்டே தரப்பினருக்கு ஒதுக்குவதாக மக்களவைச் செயலகமும் இன்று காலை அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.