பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டாம்! இந்த எச்சரிக்கை உண்மையா?

வாகனங்களின் பெட்ரோல் டேங்கை முழுவதும் நிரப்ப வேண்டாம் என்ற இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எச்சரிக்கை வாசகமும் வந்துவிடும்.

News image

பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டாம்! இந்த எச்சரிக்கை உண்மையா?

Updated On :23 பிப்ரவரி 2023, 1:33 pm IST


ஆண்டுதோறும் கோடை வெப்பம் தாக்கத் தொடங்கியதும், வாகனங்களின் பெட்ரோல் டேங்கை முழுவதும் நிரப்ப வேண்டாம் என்ற இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எச்சரிக்கை வாசகமும் வந்துவிடும்.

அதாவது, வரும் நாள்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். எனவே, மக்களே உங்கள் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் முழுவதும் எரிபொருள் நிரப்ப வேண்டாம். இதனால், பெட்ரோல் டேங்க் வெடிக்கும் அபாயம் உள்ளது. பெட்ரோல் டேங்கின் பாதி அளவுக்கு மட்டும் எரிபொருள் நிரப்பினால், காற்று புக வசதி இருக்கும். இதுபோன்ற சம்பவங்களால் சில விபத்துகள் நேரிட்டுள்ளன என்று இந்தியன் ஆயில் எச்சரிப்பது போன்றே ஒரு எச்சரிக்கை செய்து வலம் வரத் தொடங்கும்.

அதை மக்களும் மிகவும் பொறுப்போடு நமது நலம் விரும்பிகளுக்கும், நாம் நலம் விரும்புவோருக்கும் ஃபார்வேர்டு செய்து விடுவோம். ஆனால் அந்த தகவல் உண்மையல்ல என்றும், இந்தியன் ஆயில் நிறுவனம் அவ்வாறு ஒரு எச்சரிக்கையை விடுக்கவேயில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பெட்ரோல் டெங்க் முழுவதும் நிரப்புவதால் எந்த அபாயமும் இல்லை, இது தொடர்பாக தவறான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அது நாங்கள் விடுத்த எச்சரிக்கையல்ல. போலியானது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த எச்சரிக்கை வாசகம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோடைக் காலம் முழுக்க சமூக வலைத்தளத்தில் எந்த தடையும் இல்லாமல் வலம்வந்துகொண்டிருக்கிறது. அதனை நம்ப வேண்டாம். தயவுகூர்ந்து பகிரவும் வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.