பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் இதுவே தனது கடைசி உரை என்று நா தழுதழுத்தக் குரலில் உருக்கமாக உரையாற்றினார் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா.
கர்நாடகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று பேசிய எடியூரப்பா இவ்வாறு கூறியிருந்தார்.
சட்டப்பேரவையில் நேற்று எடியூரப்பா பேசுகையில், இதுவே தனது பேரவையின் கடைசி உரை என்றும், வரும் பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், தனது ஷிகாரிபுரா தொகுதியில் தனக்குப் பதிலாக மகன் பிஒய் விஜயேந்திரா போட்டியிடுவார் என்றும் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
பிஎஸ் எடியூரப்பா கடந்த 1983ஆம் ஆண்டு முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டார். அவர் பேரவை உறுப்பினராக இதுவரை 6 முறை தேர்வு செய்யப்பட்டவர்.
இடையில், 1999ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் மட்டும் அவர் தோல்வியை தழுவியிருந்தார். இவர் நான்கு முறை முதல்வராகஇருந்தவர். 2019ஆம் ஆண்டு சிறந்த எம்எல்ஏ விருதையும் வென்றவர்.
நேற்று அவர் பேசுகையில், இது என் கடைசி பேரவை உரை என்று நெகிழ்ச்சியோடு பேசியிருந்தார். அப்போது, பேரவைத் தலைவர் விஷ்வேஷ்வர் ஹெக்டே குறுக்கிட்டு, நீங்கள் இந்தப் பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையும் உரையாற்ற வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என்றும், எனவே, இது உங்கள் கடைசி உரையல்ல என்றும் கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


