மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: சுகேஷின் காவல் மேலும் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடா்பாக இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகரின் காவலை மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :24 பிப்ரவரி 2023, 9:51 am

DIN

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடா்பாக இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகரின் காவலை மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரெலிகோ் புரொமோட்டா் நிறுவனத்தின் மால்விந்தா் சிங்கின் மனைவியிடம், சுகேஷ் சந்திரசேகா் மற்றும் அவரது கூட்டாளிகள் மத்திய உள்துறை மற்றும் சட்டத் துறையின் செயலாளர்கள் என ஏமாற்றி, ரூ.4 கோடியை மோசடி செய்து பெற்றது தொடா்பாக தில்லி போலீஸின் சிறப்புப் பிரிவில் கடந்த 2021 செப்டம்பரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை இந்த வழக்குத் தொடா்பாக அமலாக்கத் துறையினா் கைது செய்தனர். இதையடுத்து, சுகேஷை 9 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், 9 நாள்கள் முடிவடைந்த நிலையில், தீபக் ராம்தானி மற்றும் பிற சிறை அதிகாரிகளுக்கு செலுத்தப்பட்ட பணம் குறித்த விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து, சுகேஷின் காவல் மீண்டும் மூன்று நாள்களுக்கு நீடித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு சுகேஷ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 3-ஆவது வழக்காகும். இதற்கு முன்பாக, சிறையிலுள்ள மால்விந்தா் சிங்கின் சகோதரர் ஷிவிந்தா் சிங்கை விடுதலை செய்ய உதவுவதாகக் கூறி அவருடைய மனைவியை ஏமாற்றி மோசடி செய்து ரூ.200 கோடி பெற்ற்காகவும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வி.கே.சசிகலா பிரிவினருக்கு பெற்றுத் தர தோ்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க முயன்றது தொடர்பாகவும் 2 சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குகள் சுகேஷ் சந்திரசேகா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.