பெங்களூரு: மூத்த பாஜக தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா, பேரவையில் இன்று தனது நிறைவு உரையை ஆற்றினார். அப்போது, எனது கடைசி மூச்சு வரை கட்சி வளர்ச்சிக்காகப் போராடுவேன் என்றார்.
கர்நாடக பேரவையில் இன்று தனது நிறைவு உரையை ஆற்றினார் எடியூரப்பா. அப்போது, மாநில பேரவைத் தேர்தல்களில் இனி போட்டியிடப்போவதில்லை என்றும், எனது கடைசி மூச்சு வரை கட்சி வளர்ச்சிக்காகப் போராடுவேன் என்று கூறினார்.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
இவ்வளவு தூரம் நான் பயணித்ததற்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம். ஆர்எஸ்எஸ்-இல் இருந்த போது எனக்குக் கிடைத்த பயிற்சிகளே, இந்த அளவுக்கு நான் உயர காரணமாக இருந்தது. மீண்டும் எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று முடிவெடுத்துள்ளேன். மாநிலத்தில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்காகப் பாடுபடுவேன் என்றார்.
இதையும் படிக்க.. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு
ஷிகாரிபுரா மக்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றும், வரும் 27ஆம் தேதி எனக்கு 80 வயதாகிறது. பிரதமர் நரேந்திர மோடி எனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். எனது பிறந்தநாள் அன்று, ஷிமோகா விமான நிலையம் திறக்கப்படவிருக்கிறது என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


