முன்னாள் கல்லூரி மாணவரால் தீவைக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த கல்லூரிதலைமை பேராசிரியர் சனிக்கிழமை காலை மரணமடைந்தார்.
ஏற்கனவே, முன்னாள் மாணவர் கொலை மிரட்டல் விடுத்த போது காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் அதன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த சம்பவம் நடந்ததாகவும் உயிரிழந்த தலைமை பேராசிரியரின் மகள் குற்றம்சாட்டியுள்ளார்.
54 வயதான விமுக்தா ஷர்மா, இந்தூரில் இயங்கி வரும் பிஎம் கல்லூரியின் தலைமை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மீது பிப்ரவரி 20ஆம் தேதி முன்னாள் மாணவர் தீ வைத்த நிலையில், உடலில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
கற்றவாளி அசுசோஷ் ஸ்ரீவத்சவா, பி.பார்ம் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் செய்யப்பட்டதால், விமுக்தா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியதில், அவருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டது.
இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


