திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

முன்னாள் கல்லூரி மாணவரால் தீவைக்கப்பட்ட தலைமை பேராசிரியர் மரணம்

முன்னாள் கல்லூரி மாணவரால் தீவைக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த கல்லூரிதலைமை பேராசிரியர் சனிக்கிழமை காலை மரணமடைந்தார்.

News image

முன்னாள் கல்லூரி மாணவரால் தீவைக்கப்பட்ட தலைமை பேராசிரியர் மரணம்

Updated On :25 பிப்ரவரி 2023, 10:54 am

முன்னாள் கல்லூரி மாணவரால் தீவைக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த கல்லூரிதலைமை பேராசிரியர் சனிக்கிழமை காலை மரணமடைந்தார்.

ஏற்கனவே, முன்னாள் மாணவர் கொலை மிரட்டல் விடுத்த போது காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் அதன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த சம்பவம் நடந்ததாகவும் உயிரிழந்த தலைமை பேராசிரியரின் மகள் குற்றம்சாட்டியுள்ளார்.

54 வயதான விமுக்தா ஷர்மா, இந்தூரில் இயங்கி வரும் பிஎம் கல்லூரியின் தலைமை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மீது பிப்ரவரி 20ஆம் தேதி முன்னாள் மாணவர் தீ வைத்த நிலையில், உடலில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கற்றவாளி அசுசோஷ் ஸ்ரீவத்சவா, பி.பார்ம் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் செய்யப்பட்டதால், விமுக்தா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியதில், அவருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டது.

இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.