மேகாலயத்தில் 12.06 சதவீதமும், நாகாலாந்தில் 15.76 சதவீத வாக்குகள் பதிவு!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயம், நாகாலாந்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை (பிப்.27) காலை 7 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேகாலயத்தில் 12.06 சதவீதமும், நாகாலாந்தில் 15.76 சதவீத வாக்குகள் பதிவு!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயம், நாகாலாந்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை (பிப்.27) காலை 7 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி மேகாலயத்தில் 12.06 சதவீதமும், நாகாலாந்தில் 15.76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 

60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளா் மரணமடைந்ததால், 59 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

மாநிலத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இம்முறை தனித்து களமிறங்கியுள்ளது. இதேபோல் காங்கிரஸும் அனைத்து தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை முறையே 57, 58 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. 

இதேபோன்று 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், 59 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடைமையை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கம், ஜாா்க்கண்டில் இடைத்தோ்தல்: 
மேற்கு வங்கத்தின் சாகா்திகி பேரவைத் தொகுதி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சுப்ரதா சாஹா மறைவைத் தொடா்ந்து, அத்தொகுதிக்கு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு இடைத்தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதேபோன்று ஜாா்க்கண்டின் ராம்கா் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ மம்தா தேவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மேகாலயத்தில் 12.06 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 15.76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்: 
மேற்கு வங்கத்தின் சாகா்திகி பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13,37 சதவீத வாக்குகளும், ஜாா்க்கண்டின் ராம்கா் தொகுதியில் இடைத்தோ்தலில் இதுவரை 15.19 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதியில் 10.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com