ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸ் கட்சியின் நிரந்தர நிர்வாகிகள் பதவியில் சோனியா, ராகுல்?

காங்கிரஸ் கட்சியின் நிரந்தர நிர்வாகிகள் பதவிகளில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நியமனம் செய்ய முடிவு

News image
Updated On :4 ஜனவரி 2023, 9:19 am

DIN


புதுதில்லி: காங்கிரஸ் கட்சியின் நிரந்தர நிர்வாகிகள் பதவிகளில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான செயல்திட்டங்களை கட்சியின் செயற்குழு அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

2019 மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார். 

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் புதிய தலைவராக கர்நாடகத்தைச்  சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி நிரந்தர நிர்வாகிகளாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை நியமனம் செய்ய அக்கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 

காங்கிரஸ் கட்சியின் மாநாடு ராய்ப்பூரில் பிப்ரவரி 24 முதல் 26 ஆம் தேதி வரை நடத்துவதற்கு கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளது. 

இந்த மாநாட்டின்போது கட்சியின் தலைவராக அடுத்த 5 ஆண்டுகள் கார்கேவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாநாட்டின் போது செயற்குழு தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இந்த உள்கட்சி தேர்தலில் சோனியாவும், ராகுலும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

அதே நேரத்தில், சோனியா காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியிருந்தாலும், கட்சியின் முக்கிய உறுப்பினர்களாகவே உள்ளனர்.

கட்சியின் முக்கிய முடிவுகள், உயர்மட்ட தலைவர்கள் என்ற நிலையில் உள்ளவர்களுடன் கலந்தாலோசித்து எடுக்கப்படுவதாக தெரிகிறது.

இந்லையில், அவர்களை கட்சியின் நிரந்த நிர்வாகிகள் பதவிகளில் நியமனம் செய்ய செயற்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பான அறிவிப்பு மாநாட்டின்போது வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான செயல்திட்டங்களை காரியக் கமிட்டி நிர்வாகிகள் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அகில இந்திய காங்கிரஸ் மாநாடு குறித்து கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில்,  “இந்த 3 நாள் மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், சர்வதேச விவகாரங்கள், விவசாயம் மற்றும் விவசாயிகள், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விவாதிக்கப்படும்.

அப்போது செயற்குழு தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும். இந்த விவகாரத்தில் கட்சி வியூகம் வகுத்த பின், மாநாட்டு தீர்மானங்கள் வெளியிடப்படும்,'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.