தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சர்வதேச பயணிகளிடம் ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டுபிடிப்பு

டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, சர்வதேச விமானப் பயணிகளிடம் நடத்தப்பட்ட கரோனா சோதனையில், இதுவரை ஒமைக்ரர்னின் 11 துணை திரிபுகள் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

News image

ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டுபிடிப்பு

Updated On :5 ஜனவரி 2023, 2:46 pm IST

புது தில்லி: டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, சர்வதேச விமானப் பயணிகளிடம் நடத்தப்பட்ட கரோனா சோதனையில், இதுவரை ஒமைக்ரர்னின் 11 துணை திரிபுகள் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த 11 வகை துணை திரிபு வைரஸ்களும் ஏற்கனவே இந்தியாவில் கண்டறியப்பட்டவைதான் என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சர்வதேச பயணிகள் 19,227 பேரிடம் கரோனா சோதனை செய்யப்பட்டதில், 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த 124 பேரில் கரோனா மரபணு வரிசைமுறை சோதனை செய்யப்பட்ட 40 மாதிரிகளில் 14 பேருக்கு எக்ஸ்பிபி, எக்ஸ்பிபி.1 வைரஸ் பாதிப்பும், ஒருவருக்கு பிஎஃப் 7.4.1  வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், மக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம் என்றும், ஆனால், அரசு வழிகாட்டுதல்படி எச்சரிக்கைரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.