புது தில்லி: டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, சர்வதேச விமானப் பயணிகளிடம் நடத்தப்பட்ட கரோனா சோதனையில், இதுவரை ஒமைக்ரர்னின் 11 துணை திரிபுகள் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த 11 வகை துணை திரிபு வைரஸ்களும் ஏற்கனவே இந்தியாவில் கண்டறியப்பட்டவைதான் என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சர்வதேச பயணிகள் 19,227 பேரிடம் கரோனா சோதனை செய்யப்பட்டதில், 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த 124 பேரில் கரோனா மரபணு வரிசைமுறை சோதனை செய்யப்பட்ட 40 மாதிரிகளில் 14 பேருக்கு எக்ஸ்பிபி, எக்ஸ்பிபி.1 வைரஸ் பாதிப்பும், ஒருவருக்கு பிஎஃப் 7.4.1 வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், மக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம் என்றும், ஆனால், அரசு வழிகாட்டுதல்படி எச்சரிக்கைரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


