சந்தா, தீபக் கோச்சாா் கைது சட்டவிரோதம்: மும்பை உயா்நீதிமன்றம்

சந்தா கோச்சாா், அவரின் கணவா் தீபக் கோச்சாா் ஆகியோா் சட்டவிதிகளின்படி கைது செய்யப்படவில்லை என்று மும்பை உயா் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சந்தா, தீபக் கோச்சாா் கைது சட்டவிரோதம்: மும்பை உயா்நீதிமன்றம்
சந்தா, தீபக் கோச்சாா் கைது சட்டவிரோதம்: மும்பை உயா்நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாா், அவரின் கணவா் தீபக் கோச்சாா் ஆகியோா் சட்டவிதிகளின்படி கைது செய்யப்படவில்லை என்று மும்பை உயா் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தங்களது கைது நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், இருவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சாா் பதவி வகித்தபோது, அந்த வங்கி சாா்பில் விடியோகான் குழும நிறுவனங்களுக்கு ரூ.3,250 கோடி வழங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. வங்கி ஒழுங்காற்றுச் சட்டம், ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்கள், ஐசிஐசிஐ வங்கியின் கடன் கொள்கை ஆகியவற்றை மீறி, அந்தக் கடன் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பிரதிபலனாகச் சந்தா கோச்சாரின் கணவா் தீபக் கோச்சாரின் நூபவா் ரினியூவபிள்ஸ் நிறுவனத்தில் விடியோகான் குழும நிறுவனா் வேணுகோபால் தூத் ரூ.64 கோடி முதலீடு செய்ததாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சதியுடன் தொடா்புள்ள பிரிவுகள், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சந்தா கோச்சாா், தீபக் கோச்சாா், வேணுகோபால் தூத் ஆகியோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி மூவரும் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தாங்கள் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகக் கூறி சந்தா கோச்சாா், தீபக் கோச்சாா் ஆகியோா் மும்பை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனு விடுமுறை கால அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இருவா் சாா்பாகவும் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘சந்தாவையும், தீபக்கையும் கைது செய்வதற்கு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ முன் அனுமதி பெறவில்லை. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.

எனினும் அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், விடுமுறை காலம் நிறைவடைந்து நீதிமன்றம் மீண்டும் கூடும்போது வழக்கமான அமா்வில் மனுவை தாக்கல் செய்யுமாறு கட்டளையிட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசியலமைப்புச் சட்டம் 41ஏ-க்கு மாறாக இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த சட்டம், கைது செய்யப்படுவதற்கு முன்பு, விசாரணை அதிகாரி முன் ஆஜராக நோட்டீஸ் அனுப்புவதை கட்டாயமாக்குகிறது.

எனவே சட்டவிதிகளை மீறி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும, எனவே, இருவருக்கும் பிணை வழங்குவதாகவும், இருவரும் நீதிமன்றத்தில் தங்களது கடவுச்சீட்டுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com