ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தவிக்கும் சாலையோர மக்கள்! கடும் குளிரில் வடமாநிலங்கள்

வடமாநிலங்களில் கடுமையான குளிர் ஏற்பட்டுள்ளதால் வீடற்ற சாலையோர மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

News image
Updated On :10 ஜனவரி 2023, 7:35 am

DIN

வடமாநிலங்களில் கடுமையான குளிர் ஏற்பட்டுள்ளதால் வீடற்ற சாலையோர மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக கடுமையான குளிர் ஏற்பட்டுள்ள நிலையில், ஜனவரி மாதம் தொடங்கியது முதல் குளிரின் தன்மை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் விமான சேவைகள், ரயில் சேவைகள், சாலை போக்குவரத்து என அனைத்தும் சரியான நேரத்தில் இயங்காமல் முடங்கியுள்ளது.

தில்லி, ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான பனிமூட்டத்தால் 50 மீட்டர் தொலைவில் இருப்பவர்கள்கூட தெரியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே தில்லி, ஹரியாணா போன்ற பெருநகரங்களில் வீடற்ற சாலையோர மக்கள் குளிரை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். கடும் குளிரில் செய்வதறியாது சாலையோரம் உறங்கும் அவர்களின் புகைப்படங்கள் காண்போரை கலங்க வைக்கிறது.

Story image

மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் கடும் குளிரால் ஏற்படக்கூடிய இருதய நோய் மற்றும் பக்கவாதத்தால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கலாம் எனத் தகவல்கல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள குளிரின் தாக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.