காஷ்மீரில் ரயில் தடம் புரண்டு விபத்து!

ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில், பாரமுல்லாவிலிருந்து பனிஹால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. 
காஷ்மீரில் ரயில் தடம் புரண்டு விபத்து!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில், பாரமுல்லாவிலிருந்து பனிஹால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. 

இன்று காலை பாரமுல்லாவிலிருந்து பனிஹால் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றாலும், அந்த மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

மசஹாமா என்ற இடத்தில் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், இதுதொடர்பாக விவரங்கள் காத்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com