தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராஜஸ்தானில் பதிவான 41 பாலியல் பலாத்கார வழக்குகள் பொய்யானவை

ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவான ஒட்டுமொத்த பாலியல் பலாத்கார வழக்குகளில் 41 சதவீதம் பொய்யானவை என்ற அதிர்ச்சித் தகவலை காவல்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

News image

ராஜஸ்தானில் பதிவான 41 பாலியல் பலாத்கார வழக்குகள் பொய்யானவை

Updated On :17 ஜனவரி 2023, 10:12 am

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவான ஒட்டுமொத்த பாலியல் பலாத்கார வழக்குகளில் 41 சதவீதம் பொய்யானவை என்ற அதிர்ச்சித் தகவலை காவல்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி உமேஷ் மிஷ்ரா பேசுகையில், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், மாநிலத்தில் பதிவான ஒட்டுமொத்த பாலியல் பலாத்கார வழக்கில் 41 சதவீத வழக்குகள் பொய்யானவை என்று தெரிய வந்துள்ளது. நாட்டிலே இதுபோன்ற பொய்யான வழக்குகளின் விகிதம் 8 சதவீதம்தான் என்று கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், நாட்டிலேயே பாலியல் பலாத்கார வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. மத்தியப் பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில்தான் ராஜஸ்தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர், மக்கள் கொடுக்கும் அனைத்துப் புகார்களையும் பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அவ்வாறு அனைத்து வழக்குகளும் பதிவு செய்யப்படுவதில்லை. அதனால்தான் அங்கு குற்றம் குறைவாக இருப்பது போல காணப்படுகிறது என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.