ராஜஸ்தானில் பதிவான 41 பாலியல் பலாத்கார வழக்குகள் பொய்யானவை

ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவான ஒட்டுமொத்த பாலியல் பலாத்கார வழக்குகளில் 41 சதவீதம் பொய்யானவை என்ற அதிர்ச்சித் தகவலை காவல்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் பதிவான 41 பாலியல் பலாத்கார வழக்குகள் பொய்யானவை
ராஜஸ்தானில் பதிவான 41 பாலியல் பலாத்கார வழக்குகள் பொய்யானவை
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவான ஒட்டுமொத்த பாலியல் பலாத்கார வழக்குகளில் 41 சதவீதம் பொய்யானவை என்ற அதிர்ச்சித் தகவலை காவல்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி உமேஷ் மிஷ்ரா பேசுகையில், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், மாநிலத்தில் பதிவான ஒட்டுமொத்த பாலியல் பலாத்கார வழக்கில் 41 சதவீத வழக்குகள் பொய்யானவை என்று தெரிய வந்துள்ளது. நாட்டிலே இதுபோன்ற பொய்யான வழக்குகளின் விகிதம் 8 சதவீதம்தான் என்று கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், நாட்டிலேயே பாலியல் பலாத்கார வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. மத்தியப் பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில்தான் ராஜஸ்தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர், மக்கள் கொடுக்கும் அனைத்துப் புகார்களையும் பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அவ்வாறு அனைத்து வழக்குகளும் பதிவு செய்யப்படுவதில்லை. அதனால்தான் அங்கு குற்றம் குறைவாக இருப்பது போல காணப்படுகிறது என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com