பெங்களூரு: கர்நாடகத்தில் மதுபானம் வாங்குவோருக்கான வயது வரம்பை குறைப்பது தொடர்பான பரிசீலனைக்கு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த திட்டத்தை மாநில அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
அதன்படி, கர்நாடகத்தில் இதுவரை 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானம் விற்பனை செய்வது என்ற வயது வரம்பை அப்படியே வைத்திருப்பது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, கர்நாடகத்தில் மதுபானம் வாங்குவோருக்கான வயது வரம்பு 21லிருந்து 18 ஆக குறைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் மாநில அரசு கருத்துக் கேட்டிருந்தது.
இதற்கு பொதுமக்களிடமிருந்து எதிர்மறையான கருத்துகள் வரப்பெற்றதையடுத்து, மாநில கலால் துறை அமைச்சர் கே. கோபாலைய்யா, மக்களின் கருத்துகளை ஏற்று, மாநிலத்தின் கலால் சட்டம் மற்றும் கலால் விதிமுறைகள் என இரண்டிலுமே வயது வரம்பை 21 ஆக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பல மாநிலங்களில் மதுபானம் வாங்குவோருக்கான வயது வரம்பு 18 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், கர்நாடகத்தில் இந்த திட்டம் மக்களின் எதிர்ப்பால் செயல்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


