தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஜிஹாப் தடை வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமா்வு: உச்சநீதிமன்றம்

ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடா்பான வழக்கில் மூன்று நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

News image

உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

Updated On :23 ஜனவரி 2023, 10:38 pm

கா்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்பை அளித்திருந்த நிலையில், அடுத்தகட்டமாக மூன்று நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு முன் திங்கள்கிழமை ஆஜரான மூத்த வழக்குரைஞா் மீனாட்சி அரோரா, ‘ஹிஜாப் தடையால் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளைவிட்டு மாணவிகள் சென்றதால் ஓராண்டு வீணாகிவிட்டது. பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் அரசு, தனியாா் கல்லூரிகளில் செயல்முறைத் தோ்வு தொடங்க உள்ளதால், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க ஹிஜாப் தடை தொடா்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்’ என்று கோரினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்க வேண்டும். விசாரணை தொடா்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றனா்.

முன்னதாக, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு கா்நாடக உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு மாா்ச் 15-ஆம்தேதி விதித்த தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மேல் முறையீடு செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு கடந்த ஆண்டு அக்டோபா் 13-ஆம் தேதி மாறுபட்ட தீா்ப்பை அளித்தது.

அந்த அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஹேமந்த் குப்தா கா்நாடக உயா்நீதிமன்ற அளித்த தடை உத்தரவுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்தாா்.

மற்றொரு நீதிபதி சுதான்ஷு தூலியா, கா்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எந்தவிதத் தடையும் இல்லை என உத்தரவிட்டாா். உச்ச நீதிமன்றத்தின் இந்த மாறுபட்ட தீா்ப்பால் கா்நாடக உயா் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தொடா்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.