சண்டீகர் : தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம் சிங், 40 நாள்கள் பரோலில் சனிக்கிழமை வெளியே வந்தார். தனக்கு பரோல் கிடைத்த மகிழ்ச்சியை அவர் கேக் வெட்டிக் கொண்டாடினார். அதில்தான் சிக்கல் எழுந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ராம் ரஹீம், மிக நீண்ட வாளைக் கொண்டு கேக் வெட்டியுள்ளார்.
இதையும் படிக்க.. சென்னையை அலசி ஆராய்ந்து உலக வங்கி சொல்லியிருக்கும் முக்கிய தகவல்
தனது ஆதரவாளர்கள், ஹரியாணா மற்றும் பல்வேறு மாநிலங்களில் தூய்மை விழிப்புணர்வை பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பாஜக தலைவர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
தனது இரண்டு பெண் தொண்டர்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, ராம் ரஹீம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே 40 நாள்கள் பரோலில் வெளியே வந்த அவர், உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள பர்னாவா ஆசிரமத்துக்கு வந்தார்.
இந்த பரோல் குறித்து ஹரியாணா முதல்வர் எம்.எல். கட்டார் கூறுகையில், பரோலுக்கு விண்ணப்பிப்பது அனைத்து சிறைவாசிகளுக்கும் உள்ள உரிமை. இதில் அரசு எதையும் செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு! வெள்ளி?

பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!

யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


