தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரூ.8 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கும்பல்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் அருகே, ஏடிஎம் கருவியை உடைக்க முடியாததால், ரூ.8 லட்சம் பணத்துடன் இயந்திரத்தையே திருட்டுக் கும்பல் தூக்கிச் சென்றுள்ளது.

News image

உலகின் மிக உயரமான ஏடிஎம் எந்த நாட்டில் உள்ளது? 

Updated On :27 ஜனவரி 2023, 10:50 am

DIN


அஜ்மெர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் அருகே, ஏடிஎம் கருவியை உடைக்க முடியாததால், ரூ.8 லட்சம் பணத்துடன் இயந்திரத்தையே திருட்டுக் கும்பல் தூக்கிச் சென்றுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருடர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சுர்சுரா பகுதியில் உள்ள பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏடிஎம் அருகே இருக்கும் சிசிடிவி கேமராவில், ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காலையில்தான் இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.