தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் விமானப் படை விமானங்கள் விபத்து

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு விமானப் படை விமானங்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு விமானப்படை விமானமும் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :28 ஜனவரி 2023, 12:19 pm


மத்தியப் பிரதேசத்தில் விமானப் படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாவும், ராஜஸ்தான் மாநிலத்தில் விமானப்படையின் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் பயிற்சியின்போது, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்திலும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பனிமூட்டம் காரணமாக, இந்த விபத்துகள் நேரிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படைத்தளத்தில் இருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட  சுகோய் - 30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொரானா என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இந்திய  விமானப்படையைச் சேர்ந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதலில் தகவல்கள் வெளியாகின.  ராஜஸ்தான் மாநிலம் உச்செயின் என்ற பகுதியில் திறந்தவெளியில் விமானம் ஒன்று விழுந்து தீப்பற்றி எரிந்து வருகிறது. அங்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். 

இந்த செய்தி உறுதி செய்யப்படுவதற்குள், மத்தியப்பிரதேசத்தில் இரண்டு விமானங்கள் விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் பரவின. அடுத்தடுத்து மூன்று விமானங்கள் விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.