ஸ்ரீநகரில் பனிப்பொழிவு: பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

ஸ்ரீநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் மற்றும் கிளஸ்டர் பல்கலைக்கழகங்களில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

ஸ்ரீநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் மற்றும் கிளஸ்டர் பல்கலைக்கழகங்களில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாகவே தலைநகர் தில்லி மற்றும் அண்டை மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடும் பனி நிலவுவதால் வட மாநிலங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மூடுபனி காரணமாக ரயில், விமான சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டு தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் மற்றும் கிளஸ்டர் பல்கலைக்கழகங்களில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் பின்னர் வேறு ஒரு தேதியில் நடத்தப்படும் என காஷ்மீர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தாமதமாக செல்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com