இந்நிலையில், குடியரசுத் தலைவா் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா். ஆனால், ஸ்ரீநகரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால், மல்லிகாா்ஜுன காா்கே, அதீா் ரஞ்சன் செளதரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. கட்சியின் மூத்த எம்.பி.க்கள் யாரும் இல்லாத நிலையில், முன்வரிசை பெஞ்சில் சோனியா தனியாக அமா்ந்திருந்தாா். பல்வேறு கட்சிகளின் தலைவா்கள், அவா் அருகே வந்து வணக்கம் தெரிவித்தனா். அதேபோல், கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக வந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவும் சோனியாவும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனா்.