கட்சிகளை உடைத்து அனைவரையும் அச்சுறுத்த முயல்கிறது பாஜக: கேஜரிவால் கண்டனம்!

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
கட்சிகளை உடைத்து அனைவரையும் அச்சுறுத்த முயல்கிறது பாஜக: கேஜரிவால் கண்டனம்!

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், தில்லி முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

கட்சிகளை உடைத்து அனைவரையும் அச்சுறுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டை அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முயைது என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com