தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தில்லியைத் தொடர்ந்து தத்தளிக்கும் மும்பை: ஆரஞ்சு எச்சரிக்கை

இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் மும்பையில் பெய்த கன முதல் மிகக் கனமழை காரணமாக, நகரமே தத்தளிக்கிறது.

News image
Updated On :18 ஜூலை 2023, 12:45 pm

DIN

இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் மும்பையில் பெய்த கன முதல் மிகக் கனமழை காரணமாக, நகரமே தத்தளிக்கிறது.

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் சராசரி அளவு 88.24 மில்லி மீட்டர் என்று பதிவாகியிருக்கிறது.

ஏற்கனவே, மும்பை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையமோ, செவ்வாய்க்கிழமை, மும்பையில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மும்பையின் பாந்த்ரா, செம்பர், கோட்டை, மாதுங்கா, பைகுள்ளா பகுதிகளில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்துள்ளது.

இந்த நிலையில்தான், ஜூலை 19ஆம் தேதி வரை மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.