தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

திருச்சியில் சிவாஜி சிலையை திறக்காவிட்டால் அக். 1-இல் போராட்டம்

திருச்சியில் அமைக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்காவிட்டால் அக்டோபர் 1 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என சிவாஜி ரசிகர்கள் தெரிவித்தனர்.

Published On :2 பிப்ரவரி 2024, 8:10 am IST

தஞ்சாவூர்: திருச்சியில் அமைக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்காவிட்டால் அக்டோபர் 1 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என சிவாஜி ரசிகர்கள் தெரிவித்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள சிவாஜி சிலைக்கு அவரது ரசிகர்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவர் சதா. வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலை 13 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு திறந்து வைக்க வேண்டும் என்பதே அகில உலக சிவாஜி ரசிகர்களின் வேண்டுகோள்.

திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என நாங்கள் யாரும் கேட்கவில்லை என்றாலும் அமைச்சர் கே.என். நேரு தாமாகவே முன்வந்து முழு மனதுடன் சிவாஜிக்கு சிலை வைத்ததை வரவேற்கிறோம். 

இந்த சிலையை திறக்கக் கோரி அமைச்சர் நேருவிடம் கடந்த வாரம் முறையிட்டோம். அவரும் ஒரு மாதத்தில் செய்து தருவதாக உறுதி அளித்தார். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அமைச்சரின் இல்லத்தை சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்த நாளான அக்டோபர் 1 ஆம் தேதி முற்றுகையிட உள்ளோம். இப்போராட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களும் ஒன்று திரண்டு மேற்கொள்ளவுள்ளோம் என்று வெங்கட்ராமன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.