வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

திருச்சியில் சிவாஜி சிலையை திறக்காவிட்டால் அக். 1-இல் போராட்டம்

திருச்சியில் அமைக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்காவிட்டால் அக்டோபர் 1 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என சிவாஜி ரசிகர்கள் தெரிவித்தனர்.

News image
Updated On :21 ஜூலை 2023, 11:34 am IST

தஞ்சாவூர்: திருச்சியில் அமைக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்காவிட்டால் அக்டோபர் 1 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என சிவாஜி ரசிகர்கள் தெரிவித்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள சிவாஜி சிலைக்கு அவரது ரசிகர்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவர் சதா. வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலை 13 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு திறந்து வைக்க வேண்டும் என்பதே அகில உலக சிவாஜி ரசிகர்களின் வேண்டுகோள்.

திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என நாங்கள் யாரும் கேட்கவில்லை என்றாலும் அமைச்சர் கே.என். நேரு தாமாகவே முன்வந்து முழு மனதுடன் சிவாஜிக்கு சிலை வைத்ததை வரவேற்கிறோம். 

இந்த சிலையை திறக்கக் கோரி அமைச்சர் நேருவிடம் கடந்த வாரம் முறையிட்டோம். அவரும் ஒரு மாதத்தில் செய்து தருவதாக உறுதி அளித்தார். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அமைச்சரின் இல்லத்தை சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்த நாளான அக்டோபர் 1 ஆம் தேதி முற்றுகையிட உள்ளோம். இப்போராட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களும் ஒன்று திரண்டு மேற்கொள்ளவுள்ளோம் என்று வெங்கட்ராமன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.