தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது: மகாராஷ்டிர துணை முதல்வர்

கனமழை தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள மகாராஷ்டிர அரசு தயார் நிலையில் உள்ளது என அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 ஜூலை 2023, 11:32 am

DIN

கனமழை தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள மகாராஷ்டிர அரசு தயார் நிலையில் உள்ளது என அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. விதர்பாவில் கடந்த சில தினங்களாக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. 

மகாராஷ்டிர கனமழை தொடர்பாக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நாக்பூர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் கடந்த 3 நாள்களில் 15-20 நாள்களில் பெய்யக் கூடிய மழையினைப் பெற்றுள்ளன. வானிலை எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தின் அகோலா 107.9 மீ.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.