மியான்மர் நாட்டைச் சேர்ந்த 718 பேர் சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்நிலையில் 301 குழந்தைகள், 208 பெண்கள் உள்பட 718 மியான்மர் நாட்டினர் ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் 6 பிரிவுகளாக சரியான ஆவணம் இல்லாமல் மணிப்பூரில் சந்தேல் மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளனர்.
இதுகுறித்து மணிப்பூர் மாநில அரசு, அவர்கள் எவ்வாறு மணிப்பூருக்குள் நுழைந்தார்கள்? அனுமதி அளித்தது எப்படி? என்று அசாம் ரைபிள்ஸ் படையிடம் விளக்கம் கோரியுள்ளது.
மேலும் இதுகுறித்து துணை ராணுவப் படையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ள மாநில அரசு, சட்டவிரோதமாக உள்நுழைந்தவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க சந்தேல் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க | மணிப்பூரில் பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி!