மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர் நாட்டினர்!

மியான்மர் நாட்டைச் சேர்ந்த 718 பேர் சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :25 ஜூலை 2023, 12:22 pm

DIN

மியான்மர் நாட்டைச் சேர்ந்த 718 பேர் சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

மணிப்பூரில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்நிலையில் 301 குழந்தைகள், 208 பெண்கள் உள்பட 718 மியான்மர் நாட்டினர் ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் 6 பிரிவுகளாக சரியான ஆவணம் இல்லாமல் மணிப்பூரில் சந்தேல் மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளனர். 

இதுகுறித்து மணிப்பூர் மாநில அரசு, அவர்கள் எவ்வாறு மணிப்பூருக்குள் நுழைந்தார்கள்? அனுமதி அளித்தது எப்படி? என்று அசாம் ரைபிள்ஸ் படையிடம் விளக்கம் கோரியுள்ளது. 

மேலும் இதுகுறித்து துணை ராணுவப் படையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ள மாநில அரசு, சட்டவிரோதமாக உள்நுழைந்தவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க சந்தேல் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.