நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை வழங்குகிறதா மேற்கு வங்கம்?

தரவுகளின்படி, நாடு முழுவதும் வழங்கப்பட்ட 94 லட்சம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளில், மேற்கு வங்கத்திலிருந்து இதுவரை ஒன்பது அட்டை மட்டுமே உருவாக்கப்பட்டது.

News image
Updated On :6 ஜூன் 2023, 4:51 pm

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் வழங்கப்பட்ட 94 லட்சம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளில், மேற்கு வங்கத்திலிருந்து இதுவரை ஒன்பது அட்டை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் வழங்கப்படும் சலுகைகளைப் பெற ஊனமுற்றோர் அடையாள அட்டை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, இதுவரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 716 மாவட்டங்களில் 94.30 லட்சம் இ-யுடிஐடி கார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேற்கு வங்கத்திலிருந்து, ஒன்பது பேருக்கு மட்டுமே அடையாள அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டைகள் வழங்க மேற்கு வங்கத்தில் தனி திட்டம் உள்ளதா என்பது குறித்து விரிவான தகவலும் இல்லை.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அட்டைகள் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.