பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிகார் மாநிலத்தில் தூணுக்கும் ஸ்லாப்புக்கும் இடையே சிக்கிய சிறுவன் உயிரிழப்பு!

பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பாலத்தில் தூணுக்கும், ஸ்லாப்புக்கும் இடையில் சிக்கிய 11 வயது சிறுவன் இன்று உயிரிழந்தான்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:35 am IST

பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பாலத்தில் தூணுக்கும், ஸ்லாப்புக்கும் இடையில் சிக்கிய 11 வயது சிறுவன் இன்று உயிரிழந்தான். சுமார் 12 முதல் 14 மணி நேரம் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவனது உடலை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,  சிறுவனை மீட்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. இதுகுறித்து பிக்ரான்கஞ்ச் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் உபேந்திர பால் கூறுகையில், பாலத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பணி சுமார் 12 முதல் 14 மணி நேரம் நீடித்தது என்றார்.

இது குறித்து மருத்துவர் கூறுகையில், சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து வரும் முன் இறந்து விட்டதாக தெரிவித்தார். தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிறுவனின் உடலை மீட்க 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக சிறுவனின் தந்தை சத்ருதன் பிரசாத் கூறுகையில், தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகவும் தெரிவித்தார்.

சிறுவனைத் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சோன் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் தூண் எண் 1ல் ஸ்லாப் இடையில் சிறுவன் சிக்கியிருப்பதாக ஒரு பெண் தெரிவித்ததாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.