தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிகார் மாநிலத்தில் தூணுக்கும் ஸ்லாப்புக்கும் இடையே சிக்கிய சிறுவன் உயிரிழப்பு!

பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பாலத்தில் தூணுக்கும், ஸ்லாப்புக்கும் இடையில் சிக்கிய 11 வயது சிறுவன் இன்று உயிரிழந்தான்.

News image
Updated On :8 ஜூன் 2023, 4:41 pm

DIN

பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பாலத்தில் தூணுக்கும், ஸ்லாப்புக்கும் இடையில் சிக்கிய 11 வயது சிறுவன் இன்று உயிரிழந்தான். சுமார் 12 முதல் 14 மணி நேரம் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவனது உடலை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,  சிறுவனை மீட்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. இதுகுறித்து பிக்ரான்கஞ்ச் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் உபேந்திர பால் கூறுகையில், பாலத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பணி சுமார் 12 முதல் 14 மணி நேரம் நீடித்தது என்றார்.

இது குறித்து மருத்துவர் கூறுகையில், சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து வரும் முன் இறந்து விட்டதாக தெரிவித்தார். தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிறுவனின் உடலை மீட்க 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக சிறுவனின் தந்தை சத்ருதன் பிரசாத் கூறுகையில், தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகவும் தெரிவித்தார்.

சிறுவனைத் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சோன் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் தூண் எண் 1ல் ஸ்லாப் இடையில் சிறுவன் சிக்கியிருப்பதாக ஒரு பெண் தெரிவித்ததாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.